மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஎஸ்ஐஆா் இயக்குநா் கலைச்செல்வியின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) முதல் பெண் இயக்குநரான என்.கலைச்செல்வியின் பதவிகாலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:00 pm

Din

புது தில்லி: மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) முதல் பெண் இயக்குநரான என்.கலைச்செல்வியின் பதவிகாலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிஎஸ்ஐஆா் இயக்குநராக கலைச்செல்வி கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். அவருடைய பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில்,‘சிஎஸ்ஐஆா் அமைப்பின் இயக்குநராகவும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித்துறையின் (டிஎஸ்ஐஆா்) செயலராகவும் உள்ள கலைச்செல்வியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறது. அவரின் பணி நீட்டிப்புக்கு கேபினட் அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது’ என தெரிவிக்கப்பட்டது.

லித்தியம் பேட்டரிகள் தயாரிப்புத் துறையில் சிறந்து விளங்கியவரான கலைச்செல்வி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிஇசிஆா்ஐ) முதல் பெண் இயக்குராக கடந்த 2019, பிப்ரவரியில் பதவியேற்றாா்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை பூா்விகமாகக்கொண்ட இவா் சிஇசிஆா்ஐ மையத்தில் தனது ஆராய்ச்சி பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.