இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா

ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல்.

News image
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)
Updated On :22 ஜூலை 2024, 7:07 am

DIN

பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கடந்த சில வாரங்களாக கதுவா, தோடா, உதம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது குறித்து ஃபரூக் அப்துல்லா கூறுகையில்,

“இரு நாடுகளிலும் அமைதியை விரும்பாதவர்கள் வெகு சிலரே உள்ளனர். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஜம்மு - காஷ்மீரில் எத்தனை படைகள் உள்ளன என்பதை நீங்களே பார்க்கலாம். மலைப் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 7,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இல்லை. பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரைகூட தயாராக மாட்டார்கள். நாங்கள் எவ்வளவு கூறினாலும், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.