இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாடாளுமன்றத்தில் ராகுலை சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு!

விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

News image
ராகுல் காந்தி
Updated On :24 ஜூலை 2024, 7:35 am

DIN

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க வந்த விவசாய சங்க தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்த நிலையில், அவர்களை பாதுகாப்புப் படை அதிகாரிகள் உள்ளே அனுமதித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 7 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை ராகுல் காந்தி இன்று சந்திக்கவிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியை சந்திக்க வந்த விவசாய சங்கத்தினரை நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, எங்களை சந்திக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம், ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர், விவசாயிகள் என்ற காரணத்துக்காக மறுப்பு தெரிவித்திருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விவசாய சங்க பிரதிநிதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

தற்போது விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த சந்திப்பின்போது, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்ய ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.