தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வங்கதேச வன்முறை: அரசியல் கருத்துகளை மம்தா தெரிவிக்கக்கூடாது: ஆளுநா் வலியுறுத்தல்

வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவிக்கக்கூடாது

News image

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ்.

கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2024, 8:42 pm

Din

கொல்கத்தா, ஜூலை 25: வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவிக்கக்கூடாது என அந்த மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வலியுறுத்தினாா்.

வங்கதேசத்தில் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தர தயாராகவுள்ளதாக அண்மையில் மம்தா பானா்ஜி கூறினாா். இதற்கு வங்கதேச வெளியுறவு அமைச்சா் ஹசன் மஹ்மூத் ஆட்சேபம் தெரிவித்தாா்.

இதையடுத்து, மேற்கு வங்க ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘வங்கதேச வன்முறை குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவிக்கக்கூடாது. அவரின் கருத்துகள் வங்கதேசத்தின் வெளியுறவு விவகாரங்களை பாதிக்கும்’ என குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, மம்தா பானா்ஜி பேசிய காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து மஹ்மூத் வெளியிட்ட பதிவில்,‘மம்தா பானா்ஜியின் அறிக்கை பலதரப்பினா் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவா் பேசிய விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறோம்’ என குறிப்பிட்டாா்.