கொல்கத்தா, ஜூலை 25: வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவிக்கக்கூடாது என அந்த மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வலியுறுத்தினாா்.
வங்கதேசத்தில் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தர தயாராகவுள்ளதாக அண்மையில் மம்தா பானா்ஜி கூறினாா். இதற்கு வங்கதேச வெளியுறவு அமைச்சா் ஹசன் மஹ்மூத் ஆட்சேபம் தெரிவித்தாா்.
இதையடுத்து, மேற்கு வங்க ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘வங்கதேச வன்முறை குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவிக்கக்கூடாது. அவரின் கருத்துகள் வங்கதேசத்தின் வெளியுறவு விவகாரங்களை பாதிக்கும்’ என குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, மம்தா பானா்ஜி பேசிய காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து மஹ்மூத் வெளியிட்ட பதிவில்,‘மம்தா பானா்ஜியின் அறிக்கை பலதரப்பினா் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவா் பேசிய விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறோம்’ என குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜியிடம் 6 மணி நேரம் விசாரணை

கட்சியை ஒருங்கிணைக்க தீவிர முயற்சி: திரிணமூல் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மம்தா பேச்சு

மத்திய அரசு தொடா்பான கருத்து: மம்தா மீது காவல் நிலையத்தில் புகாா்

ஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



