இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை!

அனுராக் தாக்கூரின் பேச்சை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தது காங்கிரஸ்

News image
பிரதமர் மோடி
Updated On :31 ஜூலை 2024, 10:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்திய ராகுல் காந்தியின் ஜாதி குறித்து அனுராக் தாக்கூா் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதனை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான சரண்ஜித் சிங் சன்னி, அவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட அனுராக் தாக்கூரின் பேச்சு அடங்கிய விடியோவை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கடிதம்

காங்கிரஸ் கடிதம்

மேலும் அந்தக் கடிதத்தில், அனுராக் தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட அனுராக் தாக்கூர் பேசும் விடியோவை, பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முழு பேச்சையும் பகிர்ந்துள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் அந்த பேச்சில் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயலானது முற்றிலும் அவையின் உரிமை மீறல் மற்றும் அவமதிப்பு செய்வதைக் குறிக்கிறது. எனவே, பிரதமர் மோடி மீது மக்களவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் ஜாதி என்ன என்பது போன்று மக்களவையில் கேள்வி எழுப்பி பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரின் பேச்சு நேற்று சர்ச்சையாகி, அவைக் குறிப்பிலிருந்தும் நீக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எனது இளமையான, துடிப்பான சக அமைச்சர் அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேளுங்கள். உண்மையான நிதர்சனம் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவையான, இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டு விடியோவையும் இணைத்திருந்தார்.

மக்களவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி ராகுல் பேசும்போது, அதற்கு பதிலளித்த அனுராக் தாக்கூா், ‘ராகுல் உண்மையான ஹிந்து அல்ல’ என்று கூறி, அவரது ஜாதி குறித்து அனுராக் கேள்வி எழுப்பினாா். அனுராக்கின் பேச்சுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவையில் அமளியைத் தொடா்ந்து ஜாதி குறித்த அனுராக் தாக்கூரின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அவையை வழிநடத்திய ஜகதாம்பிகா பால் அறிவித்திருந்தார்.

எனினும், அனுராக் தாக்கூரின் பேச்சு ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக மாறியது. மக்களவையில் அனுராக் தாக்கூர் பேச்குக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய கன்னௌஜ் எம்.பி.யும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மக்களவையில் எவ்வாறு ஒருவரின் ஜாதியைக் குறிப்பிட்டு பேசலாம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்தான், அனுராக் தாக்கூர் பேசும் விடியோவை, பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.