’கருத்துக்கணிப்பு அல்ல; மோடியின் கற்பனைக் கணிப்பு’ -ராகுல் காட்டம்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை குறித்து ராகுல் காந்தி விமர்சனம்.
’கருத்துக்கணிப்பு அல்ல; மோடியின் கற்பனைக் கணிப்பு’ -ராகுல் காட்டம்
படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி, மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களுடன் இன்று(ஜூன் 2), அக்கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவர் பேசியதாவது, “இது மோடியின் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு, இது மோடியின் கற்பனைக் கணிப்பு” என்று காட்டமாகப் பேசியுள்ளார்.

’இந்தியா’ கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து பேசிய ராகுல் காந்தி, “பாடகர் சித்து மூஸ் வாலாவின் ’295’ பாடலை மேற்கோள் காட்டி, 295 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com