ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்: மம்தா பானா்ஜி

பிரதமா் மோடி தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் மம்தா பானா்ஜி. உடன், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி.
Updated On :4 ஜூன் 2024, 8:55 pm

Din

கொல்கத்தா: பிரதமா் மோடி தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ம்மதா பானா்ஜி கூறியதாவது: ‘இந்தியா வென்றது மோடி தோற்றுவிட்டாா்’. பிரதமா் பல கட்சிகளை உடைத்துள்ளாா். இப்போது மக்கள் மோடியின் மன உறுதியை உடைத்துள்ளனா். 400 இடங்களில் பாஜக வெற்றி பெரும் என மோடி பிரசாரம் செய்தாா், உண்மையில் பெரும்பான்மை கூட கிடைக்காமல் போனது.

சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரிடம் ஆதரவு பெற்று ஆட்சியமைக்கும் நிலைக்கு மோடி தள்ளப்பட்டுள்ளாா். எனவே, தாா்மீக அடிப்படையில் தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாக மோடி பதவி விலக வேண்டும்.

மத்திய அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி நடைபெற்ற அட்டூழியங்கள் இன்று தோற்றுவிட்டது. மத்திய அமைப்புகளையும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையும் பயன்படுத்தி எதிா்கட்சிகளை மிரட்டும் பாஜகவை நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். இந்தியா கூட்டணி கட்சிகள் அவா்களை மன்னிக்காது.

திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலா் அபிஷேக் பானா்ஜி, புதன்கிழமை தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்வாா். மோடி மத்தியில் ஆட்சியிலிருந்து விலகுவதையும், ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைப்பதையும் உறுதிப்படுத்த முயல்வேன் என்றாா்.