ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

இன்சுலின் என்ற பெயரில் ஹோமியோபதி மருந்தா?

சர்க்கரை நோய்க்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத, இன்சுலின் என்று பெயரிட்ட ஹோமியோபதி மருந்து சந்தையில் விற்கப்படுகிறது.

News image
Updated On :16 ஜூன் 2024, 12:30 pm IST

சர்க்கரை நோய்க்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத, இன்சுலின் என்று பெயரிட்ட ஹோமியோபதி மருந்து சந்தையில் விற்கப்படுகிறது.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தெளிவாக அறிவுறுத்தியிருந்த போதிலும், இந்த மருந்து நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆயுஷ் அமைச்சகமும் ராஜஸ்தான் அரசும் காலம் தாழ்த்தி வருகின்றன.

இந்தப் பிரச்னை குறித்து ஆர்டிஐ ஆர்வலர் டாக்டர் கே.வி. பாபு முதன்முதலில் கடந்த ஜனவரி மாதம் பேசினார். இந்த ஹோமியோபதி மாத்திரையானது, எவ்வாறு சர்க்கரை நோயாளிகளின் உண்மையான இன்சுலினை தடுத்து நிறுத்தி, குழப்பம் விளைவிக்கிறது என்பது குறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டுகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.

டாக்டர் பாபுவின் கூற்றுப்படி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தெளிவாக அறிவுறுத்தியிருந்த போதிலும், இந்த மருந்து நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆயுஷ் அமைச்சகமும் ராஜஸ்தான் அரசும் கடந்த சில மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தார்.

டிசிஜிஐ(DCGI) மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டத்தை மீறி, சட்டவிரோதமாக விற்கப்படும் இன்சுலின் மாத்திரைகள் குறித்து எனது புகார்கள் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஐந்து மாதங்களாகவும், மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் நான்கு மாதங்களாகவும் மற்றும் ராஜஸ்தான் ஹோமியோபதி இயக்குநரிடம் மூன்று மாதங்களாகவும் நிலுவையில் உள்ளன.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மத்திய குழு உறுப்பினரான பாபு கூறினார்.

மருந்து நிறுவனம், இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக ராஜஸ்தானின் உரிமம் வழங்கும் அதிகாரியால், 'உரிமம் பெற்ற மருந்து' என்ற அனுமதியை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஹோமியோபதி மாத்திரை உரிமம் பெற்றதா அல்லது இல்லையா என்பது எனது விவாதம் அல்ல, ராஜஸ்தான் மாநில உரிமம் வழங்கும் அதிகாரியால் தவறாக அனுமதி வழங்கப்பட்டு இருந்தால் அதை திருத்துவது அவர்களின் பொறுப்பாகும் என்று கேரளத்தை சேர்ந்த பாபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.