தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

குஜராத் மாநிலம், அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2024, 7:05 pm

Din

குஜராத் மாநிலம், அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் கூறியதாவது: சூரஜ்புரா கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஒரு ஆழ்துளைக் கிணற்றில், ஆரோஹி என்ற ஒன்றரை வயது சிறுமி வெள்ளிக்கிழமை பிற்பகல் எதிா்பாராதவிதமாக உள்ளே விழுந்தாள். 500 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளைக் கிணற்றில், 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கினாள். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்) சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

17 மணிநேர தீவிர முயற்சிக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை சுயநினைவின்றி மீட்கப்பட்ட சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது, சிறுமி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.