தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

’வந்தே பாரத்’ ரயில் உணவில் ’கரப்பான்பூச்சி’

வந்தே பாரத்’ ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருப்பதைக் கண்டு பயணியர்கள் அதிர்ச்சி

News image
- dot com
Updated On :20 ஜூன் 2024, 11:04 am

DIN

விதித் வர்ஷ்னே என்பவர், ஜூன் 18ஆம் தேதியில் ’வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலில், போபாலில் இருந்து ஆக்ராவுக்கு அவரது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது, ரயிலில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. விதித்தின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு, விதித் தனது மொபைலில் புகைப்படம் எடுத்து, அதனை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ரயிலில் உணவு விநியோகிக்கும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரயில் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தையும், ரயில் போக்குவரத்துத்துறை அமைச்சரையும் மேற்கோள்காட்டி, புகார் அளித்திருந்தார்.

ஆனால், விதித் ஜூன் 18ஆம் தேதி அளித்த புகாருக்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, இந்திய ரயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமும், ரயில் போக்குவரத்துத் துறையும் மன்னிப்புக் கோரியதுடன், இந்த சம்பவத்தில் தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர்களது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஐ.ஆர்.சி.டி.சி.யின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ”உங்கள் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இந்த விஷயம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உணவு சேவை வழங்குபவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில், புதுதில்லியில் இருந்து வாரணாசிக்குச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு, பழைய உணவு வழங்கப்பட்டதாக புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.