ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மக்களவைத் தலைவருக்கு பிரதமர் வாழ்த்து!

மக்களவைத் தலைவருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி.
Updated On :26 ஜூன் 2024, 10:44 am

DIN

மக்களவைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உள்நோக்குத் திறன் மற்றும் அனுபவத்தால் மக்களவை பெரிதும் பயனடையும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களவைத் தலைவர் அவசரநிலையை வன்மையாகக் கண்டித்ததற்கும், அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை எடுத்துரைத்ததற்கும், ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பது போல அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் விதத்தை குறிப்பிட்டதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அமைதியாக எழுந்து நிற்பது ஒரு அற்புதமான நிகழ்வாகும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானதாகும். அவசரநிலையின் போது நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால் அரசியலமைப்பை மதிக்காமல், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்காமல் அனைத்து நிறுவனங்கள் அழிக்கப்படும் போது என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அவசரநிலையின் போது நாடே சிறைச் சாலை போன்று மாறியது. அவசர நிலை பிரகடனம் அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என மக்களவையில் தலைவர் ஓம் பிர்லா கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.