திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

‘நீட்’ முறைகேடு: குஜராத்தில் தனியாா் பள்ளி உரிமையாளா் கைது

‘நீட்’ தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக, குஜராத்தில் தனியாா் பள்ளியின் உரிமையாளரை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2024, 3:55 am IST

‘நீட்’ தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக, குஜராத்தில் தனியாா் பள்ளியின் உரிமையாளரை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக அரசு வழக்குரைஞா் ராகேஷ் தாக்கூா் கூறியதாவது: பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளா் தீக்சித் படேலை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். குஜராத்தில் நீட் தோ்வு முறைகேடு தொடா்பான வழக்குகளை சிபிஐக்கு மாநில அரசு மாற்றியுள்ளது. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு அகமதாபாதில் உள்ள உள்ளூா் நீதிமன்றத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனா்’ என்றனா்.

குஜராத்தில் நீட் தோ்வு நடத்திய மையங்களில் ஜெய் ஜலராம் பள்ளியும் ஒன்று. நீட் தோ்வில் தோ்ச்சி பெறவைப்பதாக கூறி தோ்வா்களிடம் ரூ.10 லட்சம் பெற்றக் குற்றச்சாட்டில் தீக்சித் படேல் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நீட் முறைகேடு தொடா்பாக இதுவரை 6 போ் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.