இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லி எல்லைகளில் வலிமையைக் கூட்டுவோம்: விவசாயிகள் சங்கம்

மார்ச் 10 - நண்பகல் 12 முதல் 4 மணி வரை தேசிய அளவில் போராட்டத்தில் ஈடுபடத் திட்டம்.

News image
Updated On :3 மார்ச் 2024, 3:13 pm

DIN

தில்லி எல்லைகளில் வலிமையைக் கூட்டும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிலுள்ள விவசாய சங்கங்கள் தில்லிக்கு வருகைத்தரவுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜக்ஜித் சிங், தில்லியை நோக்கிய எங்கள் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும். ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. தில்லி எல்லைகளில் எங்கள் வலிமையை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளோம்.

விமானம், ரயில், பேருந்துகளில் பயணித்து மார்ச் 6ஆம் தேதி தில்லிக்கு விவசாயிகள் பலர் வருகைத்தரவுள்ளனர். அவர்களை போராட்டத்தில் அமர, மத்திய அரசு அனுமதிக்கிறதா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். மார்ச் 10ஆம் தேதி நண்பகல் 12 முதல் 4 மணி வரை தேசிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.