ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ இன்றுடன் 50-வது நாளை நிறைவு செய்ய உள்ள நிலையில், பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(மார்ச்.3) நடைபெறும் ஆர்ஜேடி கட்சியின் பேரணியில் ராகுல்காந்தி கலந்துகொள்ள உள்ளார்.
ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ நேற்று(மார்ச்.2) மத்தியப் பிரதேசத்தில் நுழைந்தது. மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் ராகுலின் நடைபயணத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை, பாட்னாவுக்கு புறப்பட்ட ராகுல் காந்தி, அங்கு ஆர்ஜேடி கட்சியின் பேரணியில் கலந்துகொள்ள உள்ளார்.
பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தள(ஆர்ஜேடி) கட்சியின் மெகா பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!

ஃபிட் இந்தியா இயக்கம்: தில்லி மிதிவண்டி பேரணியில் 10,000 போ் பங்கேற்பு!

பங்கேற்பு அரசியலுக்காகவே கட்சியை தொடங்கினேன்: ம.நீ.ம. தலைவா் கமல்ஹாசன்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


