தெலங்கானாவில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் பெட்டியிலிருந்து மளமளவெனப் பரவிய தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தீயணைப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.