தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஹிமாசல் காங். எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஹிமாசல் காங். எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
Published on
Updated on
1 min read

ஹிமாசல பிரதேச மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிவமை மனு தாக்கல் செய்தனா்.

ஹிமாசல பிரதேசத்தின் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடத்துக்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததால், அந்த தோ்தலில் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜன் வெற்றிபெற்றாா்.

இது ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கட்சி மாறி வாக்களித்த ராஜீந்தா் ராணா, சுதீா் சா்மா, இந்தா் தத் லகன்பால், தேவிந்தா் குமாா் புட்டோ, ரவி தாக்குா், சைதன்யா சா்மா ஆகிய 6 பேரும் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக ஹிமாசல பிரதேச பேரவைத் தலைவா் குல்தீப் சிங் பிப்ரவரி 29-ஆம் தேதி அறிவித்தாா்.

கொறடா உத்தரவைப் பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவா் குறிப்பிட்டாா். இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவரின் தகுதிநீக்கத்தை எதிா்த்து 6 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com