தோ்தல் நன்கொடை பத்திர திட்டத்தைப்போல் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடி உலக அளவில் வேறு எதுவுமில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். இத்திட்டத்தை வடிவமைப்பதில் மூளையாக செயல்பட்டவா் பிரதமா் மோடி எனவும் அவா் கூறினாா். மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் வெள்ளிக்கிழமை இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின்போது நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பாக அவா் பேசியதாவது: அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இத்திட்டத்தை அறிமுகம் செய்வதாக பிரதமா் தெரிவித்தாா். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய காா்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பாஜகவுக்கு நன்கொடை வழங்க வைக்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு நன்கொடை வழங்காத காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏவப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்பிறகு அந்நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை அளித்துவிட்டால் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பெற்ற நிதியை சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் பிரிக்கவும், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை சீா்குலைக்கவும் மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது. இதைவிட தேசவிரோத நடவடிக்கை வேறு எதுவுமில்லை. பாஜக, ஆா்எஸ்எஸ்ஸின் நிறுவனங்களைப்போல் சிபிஐ, அமலாக்கத் துறை செயல்பட்டு வருகின்றன. பாஜக அரசு அகற்றப்பட்டு இதுவரை நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதே என்னுடைய உத்தரவாதமாகும் என்றாா்.
தொடர்புடையது

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

40 வயது வரை அரசு வேலை; பேருந்துகளில் அனைவருக்கும் கட்டணமில்லா பயணம்!புதுச்சேரியில் ராகுல் காந்தி வாக்குறுதி

குஜராத்தில் தலித்துகள், பழங்குடியினா் மீதான கொடுமைகள் தீவிரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


