லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் இழந்த கணவர்: மனைவி தற்கொலை!

கணவனின் சூதாட்ட விருப்பம், கடன் தொல்லையால் மனைவி உயிரிழப்பு

News image
மாதிரி படம்- ENS
Updated On :26 மார்ச் 2024, 12:31 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தால் கணவர் ரூ.1 கோடிக்கும் மேல் கடன்பட்டதால் கடனளித்தவர்களின் தொந்தரவு தாங்க இயலாமல் பெங்களூரில் மனைவி தற்கொலை செய்து உயிரிழந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

தர்ஷன் பாபு, பொறியாளரான இவர் 2021-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை வைத்து நடத்தப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பணம் குறைவாக இருக்கும்போதும் பந்தயத்தில் தோற்ற பிறகும் இவர் கடன் வாங்கியுள்ளார்.

கடன் கொடுத்தவர்களால் தொடர்ச்சியாக தொந்தரவு அளிக்கப்பட்டதாகவும் அதனால் 23 வயதான அவரது மனைவி ரஞ்சனி தூக்கிட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் பந்தயத்திற்கு தர்ஷன் ரூ.1.5 கோடி வரை கடன் பெற்றதாகவும் அதில் ரூ.1 கோடி திருப்பியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னமும் அவருக்கு ரூ.84 லட்சம் கடன் இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

2020-ல் தர்ஷன் - ரஞ்சிதா திருமணம் நடைபெற்றது. இணையருக்கு இரண்டு வயது மகன் உள்ளார்.

ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ் காவலர்களிடம் புகாரளித்துள்ளார். தன் மகள் கடனளித்தவர்களால் தொடர்ச்சியாக தொந்தரவுக்கு உள்ளானதாகவும் 13 பேரின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன் மருமகன் தர்ஷனுக்கு, நிச்சயமாக பணம் ஜெயித்துவிடலாம் என ஆசைகாட்டி அவரிடம் போலியான காசோலை பெற்றுக்கொண்டு பந்தயத்தில் ஈடுபட செய்ததாகவும் பெண்ணின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சனியின் தற்கொலை குறிப்பை காவலர்கள் மீட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்தனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.