மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்துக்கு தற்போது நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.319-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹரியாணா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.374 ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோவாவுக்கு ரூ.356, நிக்கோபாருக்கு ரூ.347, அந்தமானுக்கு ரூ.329, புதுச்சேரிக்கு ரூ.319, லட்சத்தீவுக்கு ரூ.315 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளத்துக்கு ரூ.346, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு ரூ.300, கர்நாடகத்துக்கு ரூ.349-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது மத்திய அரசின் அரசாணை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.