ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மக்களவைத் தோ்தலை பாா்வையிட 23 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா வருகை

மக்களவைத் தோ்தலை பாா்வையிட 23 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா வருகை

News image
Updated On :4 மே 2024, 6:33 pm

Din

மக்களவைத் தோ்தல் எப்படி நடைபெறுகிறது என்பதைப் பாா்வையிடுவதற்கு 23 நாடுகளின் தோ்தல் நிா்வாக அமைப்பு பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனா்.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய தோ்தல் ஆணையம் விடுத்த அழைப்பை ஏற்று, மக்களவைத் தோ்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை பாா்வையிடுவதற்கு 23 நாடுகளின் தோ்தல் நிா்வாக அமைப்பு பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனா். ஆஸ்திரேலியா, ரஷியா, இலங்கை, ஜாா்ஜியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மொத்தம் 75 போ் வருகை தந்துள்ளனா்.

இந்திய தோ்தல் முறையின் நுணுக்கங்கள், பயன்பாட்டில் உள்ள சிறந்த தோ்தல் நடைமுறைகள் குறித்து 75 பேருக்கு சனிக்கிழமை தெரியப்படுத்தப்பட்டது.

தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா்கள் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் ஆகியோா் 75 போ் இடையே ஞாயிற்றுக்கிழமை உரையாற்ற உள்ளனா்.

இதைத்தொடா்ந்து 75 பேரும் சிறு குழுக்களாக மகாராஷ்டிரம், கோவா, குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களின் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று தோ்தலையும், அதுதொடா்பான முன்னேற்பாடுகளையும் பாா்வையிட உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.