இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

வெளி மாநில ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள தெற்கு ரயில்வே வலியுறுத்தல்

News image
ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் அறிவிப்பு
Updated On :11 மே 2024, 12:32 pm

DIN

ரயில் பயணிகள் மற்றும் சக ஊழியர்களிடம் உரையாட வசதியாக, இதர மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள தெற்கு ரயில்வே வலியுறுத்தியிருக்கிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ரயில்நிலையங்கள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில், ரயில் நிலையங்களில் பணியாற்றும் இதர ரயில்வே ஊழியர்களுக்கு இதன் மூலம் தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தற்போது, இதர மாநில ஊழியர்கள், தமிழக பயணிகளிடம் பேச முடியாமல், பயணிகள் அவதிக்குள்ளாவதைத் தடுக்கவே தெற்கு ரயில்வே இந்த திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

தற்போது தெற்கு ரயில்வேயில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் வெளி மாநிலத்தவர்களால் தமிழில் பேச முடியாமல் உள்ளது. பலரும் ஹிந்தி தான் பேசுகிறார்கள்.

இந்த நிலையில்தான், தெற்கு ரயில்வேயின் அறிக்கையில், பல்வேறு துறை தலைவர்களும், தங்களது வெளிமாநில ஊழியர்களுக்கு தமிழ் கற்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் பிற மாநிலங்களிலும், அந்தந்த உள்ளூர் மொழிகளை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட பாஷா சங்கம் என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தி எளிதாக உள்ளூர் மொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் விர்ச்சுவல் அகாடமி என்ற இணையதளத்தையும் பயன்படுத்தி ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக பணியாற்றும் வெளிமாநில ரயில்வே ஊழியர்கள் கூட தமிழ் கற்றுக்கொள்ளவில்லை. தெற்கு ரயில்வே ஏதேனும் பரிசுகள் அறிவித்து ஊழியர்களை தமிழ் கற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், முன்பதிவு மையங்களில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு, ஆங்கிலத்தில் பயணியின் பெயர்களை அச்சடிக்கத் தெரியவில்லை என்பதால் பயணிகள் பலரும் சிக்கலை சந்திக்க நேரிடுவதாகக் குறிப்பிடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.