திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது: பிரதமர் மோடி

ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 மே 2024, 2:20 pm IST

மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்க மக்களுக்கு ஐந்து உத்தரவாதங்களை அளித்தார்.

"மேற்கு வங்க மக்களுக்கு நான் ஐந்து உத்தரவாதங்களை அளிக்க விரும்புகிறேன், மதத்தின் அடிப்படையில் யாரும் இடஒதுக்கீடு பெற முடியாது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை யாரும் தொட முடியாது. ராம நவமி கொண்டாடுவதை யாரும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது, சிஏஏ சட்டத்தை யாராலும் திரும்பபெற முடியாது." என்று தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், உச்ச நீதிமன்றத்தின் ராமர் கோயில் தீர்ப்பை ரத்து செய்வோம் என்று ராகுல் காந்தி கூறியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், சில நாள்களுக்குப் பிறகு ராமர் கோயில் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியதோடு, அவர்கள் சிஏஏவை "வில்லன்" ஆக சித்தரித்துள்ளனர் என்றும், சிஏஏ சட்டம் குடியுரிமையை வழங்குவதற்காக உள்ளது என்றும் கூறினார்.

திரிணாமூல் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் உள்ள இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாறிவிட்டனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.