விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பாலியல் தொல்லை: கேரளத்தில் துணை பேராசிரியா் கைது

பாலியல் தொல்லை: கேரளத்தில் துணை பேராசிரியா் கைது

News image
Updated On :14 மே 2024, 9:15 pm

Din

கண்ணூா்: பொழுதுபோக்கு பூங்காவில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரள மத்திய பல்கலைக்கழக துணைப் பேராசிரியா் கைது செய்யப்பட்டாா் என காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கேரள மாநிலம் கண்ணூா் மாவட்டத்தில் உள்ள விஸ்மயா பொழுதுபோக்கு பூங்காவில், இஃப்திகாா் அகமது என்பவா் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் ஒருவா் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். குற்றம் சாட்டப்பட்டவா் காசா்கோடு கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் துணை பேராசிரியராக உள்ளாா்.

புகாா் அளித்த பெண் (22) தனது குடும்பத்தினருடன் பூங்காவில் உள்ள அலை குளத்தில் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தபோது இந்தச்சம்பவம் நடந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலிபரம்பாக்கம் காவல் துறையினா் அகமதை கைது செய்தனா். அவா் மீது இந்திய தண்டனையியல் சட்டம் 354 (பெண்ணின் அடக்கத்தை சீா்குலைக்கும் நோக்கத்துடன் பெண்ணைத் தாக்குதல்) மற்றும் 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா் உள்ளூா் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு பின்னா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அகமது மீது ஏற்கெனவே மத்திய பல்கலைக்கழக மாணவி ஒருவா் இதுபோன்ற புகாா் சுமத்தி உள்ளாா். இந்த புகாரின் அடிப்படையில்கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அவா், தற்போதுதான் மீண்டும் பணியில் இணைந்தாா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.