திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

துபையில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் மீது ஃபிளமிங்கோ பறவைக் கூட்டம் மோதியதில் சுமார் 40 பறவைகள் இறந்தன.

News image
Updated On :21 மே 2024, 2:36 pm

DIN

துபையில் இருந்து மும்பைக்கு வந்த எமிரேட்ஸ் இகே508 விமானம் தரையிறங்கும்போது ஃபிளமிங்கோ பறவைக் கூட்டத்தின் மீது மோதியதில், சுமார் 40 பறவைகள் இறந்தன.

விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காயமின்றி இறங்கினர். இருப்பினும், துரதிருஷ்டவசமாக ஏராளமான ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்தன.

இந்த சம்பவத்தில் விமானமும் சிறிது சேதமடைந்தது. இதன் விளைவாக, திங்கள்கிழமை இரவு துபை புறப்படவிருந்த இகே509 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறுகையில், ''எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காட்கோபர் கிழக்கில் லக்ஷ்மி நகருக்கு அருகில் நடந்த பறவை தாக்குதலால் குறைந்தது 36 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்ததாக வன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவே பறவைகள் மீது மோதியதாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தெருநாய்கள் தரையில் அடிபட்டு விழுந்த சில பறவைகளை துரத்தின. மேலும், சிதறி விழுந்த சில பறவைகளின் உடல் பாகங்களும் உள்ளூர் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. பறவையின் உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வனத்துறை வனவிலங்கு வார்டன் பவன் சர்மா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.