ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஜூன் 4க்குப் பிறகு மோடிக்கு ஓய்வுதான் என சொல்பவர்களிடம் என்ன எதிர்பார்ப்பது? மோடி சூசகம்

ஜூன் 4க்குப் பிறகு மோடிக்கு ஓய்வுதான் என்று சொல்பவர்களிடம் என்ன எதிர்பார்ப்பது? மோடி சூசகம்

News image
Updated On :21 மே 2024, 12:05 pm IST

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிகாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பிரதமர் மோடிக்கு படுக்கையில் ஓய்வுதான் என்று சொல்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

பிகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 21ஆம் நூற்றாண்டின் இந்தியா, 'இந்திய' கூட்டணிக் கட்சிகளின் பாவங்களுடன் முன்னேறிச் செல்ல முடியாது.

இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இந்திய கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் எவ்வாறு வழியனுப்பிவைக்கப் போகிறார்கள் என்பதை முழு உலகமும் பார்க்கப்போகிறது.

மகாத்மா காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் எப்போதோ மறந்துவிட்டது, ஒரே ஒரு குடும்பத்தின் நலனைக்காக்க, இந்திய நாட்டின் 60 ஆண்டுகாலத்தையும் வீணாக்கிவிட்டது. இங்கே இந்திய மக்கள் பட்டினியில் வாடிய போது, அவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்குகளை தொடங்கினர் என்று மோடி பேசியுள்ளார்.

மேலும், ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு மோடிக்கு படுக்கையில் ஓய்வுதான் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தினர் பேசியதை சூசகமாகக் குறிப்பிட்டு பேசினார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.