நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஜூன் 4க்குப் பிறகு மோடிக்கு ஓய்வுதான் என சொல்பவர்களிடம் என்ன எதிர்பார்ப்பது? மோடி சூசகம்

ஜூன் 4க்குப் பிறகு மோடிக்கு ஓய்வுதான் என்று சொல்பவர்களிடம் என்ன எதிர்பார்ப்பது? மோடி சூசகம்

News image
Updated On :21 மே 2024, 12:21 pm IST

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிகாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பிரதமர் மோடிக்கு படுக்கையில் ஓய்வுதான் என்று சொல்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

பிகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 21ஆம் நூற்றாண்டின் இந்தியா, 'இந்திய' கூட்டணிக் கட்சிகளின் பாவங்களுடன் முன்னேறிச் செல்ல முடியாது.

இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இந்திய கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் எவ்வாறு வழியனுப்பிவைக்கப் போகிறார்கள் என்பதை முழு உலகமும் பார்க்கப்போகிறது.

மகாத்மா காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் எப்போதோ மறந்துவிட்டது, ஒரே ஒரு குடும்பத்தின் நலனைக்காக்க, இந்திய நாட்டின் 60 ஆண்டுகாலத்தையும் வீணாக்கிவிட்டது. இங்கே இந்திய மக்கள் பட்டினியில் வாடிய போது, அவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்குகளை தொடங்கினர் என்று மோடி பேசியுள்ளார்.

மேலும், ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு மோடிக்கு படுக்கையில் ஓய்வுதான் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தினர் பேசியதை சூசகமாகக் குறிப்பிட்டு பேசினார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.