சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image

மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி.

Updated On :3 நவம்பர் 2024, 6:44 am

DIN

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தோ்தலில் திருச்சூா் தொகுதியில் பாஜக சாா்பில் சாா்பில் போட்டியிட்டு சுரேஷ் கோபி வெற்றி பெற்றாா். அவருக்கு மத்திய இணையமைச்சா் பதவியும் அளிக்கப்பட்டது. தோ்தலுக்கு முன்பு ஏப்ரல் மாதம் திருச்சூரில் நடைபெற்ற பூரம் விழாவில் பங்கேற்பதற்காக சேவா பாரதி அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சுரேஷ் கோபி வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது.

வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸில் வந்து சுரேஷ் கோபி இறங்கியுள்ளாா். மேலும், மருத்துவ அவசரப் பயன்பாட்டுக்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை அவா் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா் என்று இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக காவல் துறை விசாரணையைத் தொடங்கியிருந்தது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது திரிச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆம்புலன்ஸை பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி விளக்கமளித்திருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.