தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பிய மூன்று கேள்விகள்!

பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

News image

ஜெய்ராம் ரமேஷ்

Updated On :4 நவம்பர் 2024, 12:31 pm IST

ஜார்க்கண்டில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜக ஆட்சியைப் கைப்பற்ற முயல்கிறது.

இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் பதிவில்,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எனன ஆனது? இந்த மூன்று கேள்விகளுக்கு முதலில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்.

ஜார்க்கண்டில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் தொடங்கப்படவில்லை.

மேலும், கோர்பா-லோஹர்தகா மற்றும் சத்ரா-கயா ரயில் பாதைகள் அமைப்பதற்கான வாக்குறுதி அளித்திருந்தார்.

உயிரியல் அல்லாத பிரதமர் இன்று ஜார்க்கண்டில் பேரணி நடத்துகிறார். மக்களிடம் வாக்கு சேகரிகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டியது அவசியம்.

லோஹர்தகா மற்றும் சத்ரா மக்கள் பல ஆண்டுகளாக சிறந்த ரயில் இணைப்பைக் கோரி வருகின்றனர், இதனால் உள்ளூர் மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும். ஆனால், ரயில்வே அமைச்சகம் அவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளது.

கடந்த 2022-இல், ரயில்வே அமைச்சகம் சத்ரா-கயா ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த முக்கியமான ரயில் இணைப்புகளுக்காக மக்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? இந்த அத்தியாவசியத் திட்டங்களை முடிக்கப் பிரதமர் ஏதாவது செய்கிறாரா?

உயிரியல் அல்லாத பிரதமர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்த நிறுவனங்களை வழங்கத் தவறிவிட்டதற்கு அவர் பதிலளித்தேயாக வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.