தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன்!

கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் சிறுவர் உள்பட 6 பேர் கைது

News image

கோப்புப் படம்

Updated On :8 நவம்பர் 2024, 1:39 pm

ஒடிஸாவில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகையின்போது, 19 வயதான கல்லூரி மாணவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந்தப் பெண்ணை ஓர் உணவு விடுதிக்கு அவரது காதலன் அழைத்திருந்தார். அங்கு சென்ற பெண்ணை, விடுதியின் உரிமையாளருடன் சேர்ந்து அவரது காதலனும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அதனை விடியோவாக பதிவு செய்து, பெண்ணை மிரட்டி, சிறுவர் உள்பட 4 நண்பர்களுடன் சேர்ந்து, தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இறுதியாக அவர்கள் 6 பேரும் மீது அந்தப் பெண், காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பெண்ணின் காதலன், அவரது 4 நண்பர்கள் உள்பட விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.