விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆண் தையல்காரர், உடற்பயிற்சி நிபுணர் வேண்டாம்: உ.பி. மகளிர் ஆணையம் பரிந்துரை

ஆண் தையல்காரர், உடற்பயிற்சி நிபுணர் வேண்டாம் என்று உ.பி. மகளிர் ஆணையம் பரிந்துரை

News image

பயிற்சிக் கூடம்

Center-Center-Vijayawada

Updated On :8 நவம்பர் 2024, 7:22 am

DIN

பெண்களின் ஆடையகம், உடற்பயிற்சி நிலையங்களில் ஆண் தையல்காரர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் வேண்டாம் என்று மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பெண்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் என்று, மாநில மகளிர் ஆணையம் சில பரிந்துரைகளை வைத்துள்ளது.

அதில், பெண்களுக்கான ஆடையகத்தில் பெண்களுக்கான உடைகளை தைக்க அளவெடுக்க ஆண் தையல்காரர்களும், உடற்பயிற்சி கூடங்களிலும், யோகா மையங்களிலும் ஆண் பயிற்சியாளர்கள் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

அதுபோல, பள்ளிப் பேருந்துகளிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண்கள் பணியமர்த்தப்படலாம் என்றும், துணிக் கடைகளில், பெண்களுக்கு அளவெடுக்க பெண் தையல்காரர்களே வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருக்கிறது.

இது குறித்து மகளிர் ஆணையம் கூறுகையில், இது ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். ஒப்புதல் கிடைத்ததும், முதலில், இது தொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே, பள்ளிப் பேருந்துகளில், ஒரு ஆசிரியர் மாணவர்களுடன் செல்ல வேண்டும் என்பதும், துணிக் கடைகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெண்களின் ஆடைகள் விற்பனையாகும் கடைகளில் நிச்சயம் பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும் என்பதும், பயிற்சி நிலையங்களில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வறைகள் இருக்க வேண்டும் என்பதும் பரிந்துரையாக உள்ளது.

நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு அமைப்புகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தகவல் தொழில்நுட்ப வசதியுடன் பெண்கள் ஆபத்து காலங்களில் காவல்துறையை அழைக்கவும் சில செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.