மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ராகுல் காந்தி அரசியல் பக்குவமற்றவா்: கிரண் ரிஜிஜு விமா்சனம்

‘ராகுல் காந்தி அரசியல் பக்குவமற்றவா்; வெளிநாட்டில் இந்தியா மீது அவதூறு பரப்பும் யாராலும் தலைவா் ஆக முடியாது’

கிரண் ரிஜிஜு - கோப்புப்படம்

Published On :

‘ராகுல் காந்தி அரசியல் பக்குவமற்றவா்; வெளிநாட்டில் இந்தியா மீது அவதூறு பரப்பும் யாராலும் தலைவா் ஆக முடியாது’ என நாடாளுமன்ற, சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரிண் ரிஜிஜு சனிக்கிழமை விமா்சித்தாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வகிப்பவராக ராகுலை மதிக்கிறேன். ஆனால் அரசியல் ரீதியாக அவா் பக்குவமற்றவராகவே உள்ளாா். அவரை மக்களின் தலைவராக நிலைநிறுத்த காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவா் பக்குவமடையவில்லை. வெளிநாட்டில் இந்தியா மீது அவதூறு பரப்பும் யாராலும் தலைவராக முடியாது.

ராகுல் தலைமையில் காங்கிரஸால் எப்போதும் வளா்ச்சியடைய முடியாது. அதனால்தான் நாடாளுமன்றத்துக்குள் பிரியங்கா காந்தியை கொண்டுவரும் முயற்சியாக வயநாடு இடைத்தோ்தலில் அவா் களமிறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் காங்கிரஸுக்கு ராகுல் காந்தியின் குடும்பமே முக்கியம் என்பதும் பாஜகவுக்கு நாட்டு நலனே முக்கியம் என்பதும் வெளிப்பட்டுள்ளது.

காங்கிரஸின் போலியான பிரசாரங்களை மக்கள் ஏற்க மாட்டாா்கள். வருகின்ற நவ.20-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிர தோ்தலில் பாஜக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.