குஜராத்தில் நடுக்கடலில் 700 கிலோ போதைப்பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த படகு பிடிபட்டது.
போதைப்பொருள் கடத்தலில், 700 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஈரானியப் படகு குஜராத்தின் போர்பந்தரில் இரவோடு இரவாக நடுக்கடலில் பிடிபட்டது. அதிலிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருளின் தன்மையைக் கண்டறியவும், அதிகளவிலான போதைப்பொருள் எங்கு கொண்டுச் செல்லப்பட்டது என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
In alignment with our vision for a drug-free Bharat, NCB successfully dismantled an international drug trafficking cartel today, seizing approximately 700 kg of meth in Gujarat. This joint operation with the Indian Navy and Gujarat Police exemplifies our unwavering commitment and⦠pic.twitter.com/tHFxaFietQ
— NCB INDIA (@narcoticsbureau) November 15, 2024
போர்பந்தர் கடலில் குஜராத் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லை கோடு அருகே வந்தபோது ரேடாரில் படகு சிக்கியதால் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கான கடல்வழிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் மற்றும் போதைப்பொருள்கள் குறித்து தேடுதல்கள் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஜராத்தில் இந்தளவுக்கான போதைப்பொருள்கள் பிடிபடுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக, மூன்று வாரங்களுக்கு முன் பாருச் மாவட்டத்தில் அங்கலேஸ்வரில் ரூ.250 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று அங்கலேஸ்வரில் ஆவ்கர் மருந்து விற்பனை நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடிக்கும் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாநிலங்களுக்கிடையேயான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு பிடிபட்டது; மூவா் கைது
போதைப்பொருள் கடத்தல்: ரூ.2.3 கோடி கஞ்சாவுடன் நால்வா் கைது
வியத்நாம் படகு விபத்து: வேகப்படகை ஓட்டிய கேப்டன் கைது!

கேரளத்தில் ரூ. 40 கோடி போதைப்பொருள்கள் பறிமுதல்! ரமேஷ் சென்னிதலா
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



