குஜராத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ராகிங் காரணமாக பலியானதைத் தொடர்ந்து சீனியர் மாணவர்கள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் அனில் மெதானியா எம்பிபிஎஸ் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவருடன் சேர்த்து 11 முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கடந்த சனிக்கிழமை (நவ. 16) இரவு ஹாஸ்டல் அறைக்கு ராகிங் செய்வதற்காக அழைத்துள்ளனர்.
இரண்டாமாண்டு மாணவர்கள் 15 பேர் இணைந்து அவர்கள் 11 பேரை 3 மணி நேரம் அறைக்குள் நிற்க வைத்து பாட்டுப் பாட வைத்தும் ஆட வைத்தும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அறையை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

பலியான மாணவர் அனில் மெதானியா
இதில், மூன்று மணி நேரம் நின்றதால் மாணவர் அனில் மெதானியா திடீரென மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை! தில்லி முதல்வர்
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரியின் கூடுதல் டீன் அனில் பாதிஜா மற்றும் உயிரிழந்த மாணவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் 15 மாணவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் ராகிங் தடுப்புக் குழு தலைவரான டீன் ஹர்திக் ஷா இந்த சம்பவம் தொடர்பாக 26 மாணவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களை மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மற்றும் விடுதியிலிருந்து நீக்கி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இனி சிஜேபி அழுத்தம் கொடுக்கும்! ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்துக்கு அபிஜீத் தீப்கே ஆதரவு!

"மருத்துவக் கலந்தாய்வு நடைமுறையில் மாற்றமில்லை'

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஆக.13-இல் தொடங்க வாய்ப்பு

நீட் தனது வாக்குறுதியில் தோற்றுவிட்டது; மாநிலங்களை நம்பும் காலம் வந்துவிட்டது! - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



