தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

இனி சிஜேபி அழுத்தம் கொடுக்கும்! ஜார்க்கண்ட் மாணவர் போராட்டத்துக்கு அபிஜீத் தீப்கே ஆதரவு!

ஜார்க்கண்ட் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு அபிஜீத் தீப்கே ஆதரவு அளித்துள்ளது குறித்து...

News image

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே - படம் - பிடிஐ

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:10 pm IST

ஜார்க்கண்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வாணயம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைக்கேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூலை 29 முதல் ராஞ்சியிலுள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த முறைக்கேடுகள் குறித்து பிற மாநிலங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஒரு தனிக்குழுவை அமைத்து தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவளிக்கும் எனவும், சிஜேபி உறுப்பினர்கள் ராஞ்சிக்கு நேரில் சென்று மாணவர்கள் போராட்டத்தில் துணை நிற்பார்கள் எனவும் அபிஜீத் தீப்கே இன்று (ஆக. 5) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, மகாராஷ்டிரத்தில் செய்தியாளர்களுடன் அபிஜீத் தீப்கே கூறியதாவது:

“நீதித்துறை, அரசியல், ஊடகம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எங்கள் போராட்டத்துக்கு தேசிய அளவில் ஆதரவு கிடைத்தது.

போராட்டம் வளருகையில், வெறும் கல்விச் சார்ந்த விவகாரங்களுக்கு மட்டுமின்றி கல்வி நிறுவனங்களையும் எதிர்த்துதான் போராட்டம் நடைபெற்றது. எனவே, கல்வி நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த ஒரு பொது அழுத்தக்குழுவின் தேவை உள்ளது.

தற்போதைக்கு சிஜேபி ஒரு அழுத்தக்குழுவாகச் செயல்படும். ஏனென்றால், இந்தியாவுக்கே இப்போது ஒரு அழுத்தக்குழு தேவைப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

Summary

Abhijit Deepke, founder of the cjp, has announced his support for the ongoing student protests against the government in Jharkhand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.