பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

அதானியின் ரூ.100 கோடி நன்கொடை.. வேண்டாமென நிராகரித்த முதல்வர்!

அதானி வழங்க முன்வந்த ரூ. 100 கோடி நன்கொடை: வேண்டாமென நிராகரித்த தெலங்கானா முதல்வர்

News image
Updated On :25 நவம்பர் 2024, 5:13 pm IST

அரசு பல்கலைக்கழகத்துக்கு அதானி வழங்க முன்வந்துள்ள ரூ.100 கோடி நன்கொடை தொகையை வேண்டாமென தெலங்கானா மாநில அரசால் நிராகரிப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள இளம் இந்தியா திறனாய்வு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை அளிக்க முன் வந்துள்ளார் உலக பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான தொழிலதிபர் அதானி.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் நன்கொடையை வேண்டாமென நிராகரித்துள்ளது தெலங்கானா அரசு. அதுவும், சிறிய தொகையல்ல.. நன்கொடையாக அளிக்க முன்வந்த ரூ. 100 கோடி தொகையை, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

அதானி குழுமம் மட்டுமல்லாது, வேறு எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் இதுவரை ஒரு ரூபாய் கூட தெலங்கானா அரசு பெறவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் ரேவந்த் ரெட்டி.

இப்போதைய சூழலில், அதானி குழுமம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தரப்பிலிருந்து அரசு நன்கொடை பெறுவது வீண் சர்ச்சைகளை ஏற்படுத்துமென்பதால், தெலங்கானா அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதானி குழுமத்துக்கு, மாநில அரசு தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.