அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!

கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார் விபத்துக்குள்ளானது பற்றி..

News image

விபத்துக்குள்ளான கார். - படம் : எக்ஸ்

Updated On :25 நவம்பர் 2024, 10:32 am IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார், இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

குருகிராம் மாவட்டத்தில் இருந்து பரேலி நோக்கி சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்காக மூன்று இளைஞர்கள் கூகுள் மேப்பை பின்பற்றி காரில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ராம்கங்கா ஆற்றுக்கு குறுக்கே சேதமடைந்த மேம்பாலத்தில் வழி இருப்பதாக கூகுள் மேப்பில் காட்டியதால், வேகத்தை குறைக்காமல் முன்னோக்கிச் சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

சுமார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே கார் விழுந்து நொறுங்கியுள்ளது. இரவு நேரம் என்பதால் விபத்து குறித்து யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பாலத்தின் கீழ் நொறுங்கிக் கிடந்த காரை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நிலையில் கிடந்த மூன்று இளைஞரின் உடல்களையும் மீட்ட காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:

“இந்தாண்டு தொடக்கத்தில் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால், கூகுள் மேப்பில் இந்த பாலம் சேதமடைந்தது குறித்து அப்டேட் செய்யவில்லை. இதனால் விபத்து நேரிட்டுள்ளது” என்றார்.

உயிரிழந்த இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ள நிலையில், மூன்றாவது நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், பாலத்தில் தடுப்புகள் வைத்து எச்சரிக்கை பலகை வைக்காதது விபத்துக்கு காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.