இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

6 வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி வேன் ஓட்டுநர்!

புணேவில் 6 வயது பள்ளி சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி வேன் ஓட்டுநர் கைது.

News image
கோப்புப்படம்.- ENS
Updated On :3 அக்டோபர் 2024, 6:45 am

DIN

புணேவில் 6 வயது பள்ளி சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் வான்வாடி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் சிறுமிகள் இருவர், பள்ளி முடிந்து வழக்கமாகச் செல்லும் வேனில் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

அப்போது வேன் ஓட்டுநர், சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். வீட்டிற்கு சென்றபின்னர் சிறுமிகளில் ஒருவர் தனது தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதன்படி சிறுமியின் தாயார் உடனடியாக பள்ளி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட வேன் ஓட்டுநர் சஞ்சய் ரெட்டி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

சட்டப்பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 65 (2) (12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், நான்கு வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பெற்றோர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பெண்களுக்கு எதிராக, குறிப்பாக சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. இது பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.