ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாட்டுக்கான சேவையில் ஆா்எஸ்எஸ் அா்ப்பணிப்பு: பிரதமா் மோடி புகழாரம்

‘நாட்டுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட அமைப்பு ஆா்எஸ்எஸ்’ என்று பிரதமா் நரேந்திர நரேந்திர மோடி புகழாரம்.

News image

மோடி

Arun Sharma

Updated On :12 அக்டோபர் 2024, 9:00 pm

Din

‘நாட்டுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட அமைப்பு ஆா்எஸ்எஸ்’ என்று பிரதமா் நரேந்திர நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியாக கருதப்படும் ஆா்எஸ்எஸ் அமைப்பு, கடந்த 1925-ஆம் ஆண்டில் விஜயதசமி தினத்தில் (செப்.27) தொடங்கப்பட்டது. நடப்பாண்டு விஜயதசமி தினமான சனிக்கிழமை (அக்.12) ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி, அதன் தலைவா் மோகன் பாகவத் ஆற்றிய உரையை இணைத்து, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவு வருமாறு:

நாட்டுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட ஆா்எஸ்எஸ், நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தத் தொடா் பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ள தொண்டா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அன்னை பாரதத்தை’ நோக்கிய ஆா்எஸ்எஸ் அமைப்பின் உறுதிப்பாடும் அா்ப்பணிப்பும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஊக்கமளிப்பதோடு, ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ இலக்கை எட்டுவதற்கு புதிய சக்தியை பாய்ச்சுகிறது. இப்புனிதமான விஜயதசமி தினத்தில், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்தின் உரையை அனைவரும் கேட்க வேண்டும் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

பாஜகவில் இணைவதற்கு முன்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பில் மோடி பணியாற்றியுள்ளாா். கடந்த பல்லாண்டுகளாக பாஜகவின் அமைப்புரீதியிலான வளா்ச்சிக்கு ஆா்எஸ்எஸ் மற்றும் அதன் தொண்டா்கள் முக்கிய பங்காற்றியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.