கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆர்.ஜி. கர் மருத்துவமனை முறைகேடு: 6 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை

ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பண முறைகேடு விவகாரத்தில் மேலும் 6 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :18 அக்டோபர் 2024, 2:31 pm

DIN

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நிதி முறைகேடு விவகாரத்தில் தொடர்புடையதாக மேலும் 6 மருத்துவர்களை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த வழக்கில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் அவரின் உதவியாளராகப் பணிபுரிந்த ஆஷிஷ் பாண்டே ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பண முறைகேடு விவகாரத்தில், இந்த 6 மருத்துவர்கள் குறித்த தரவுகளை சேகரித்து மாநில அரசிடம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களைப் பதவியில் இருந்து மாநில அரசு நீக்குவதன் வெளிப்படையான விசாரணை நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி முறைகேடு வழக்கில் 6 மருத்துவர்களுக்குத் தொடர்புள்ளது குறித்த முக்கிய ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும், இதனை ஆரம்பப் புள்ளியாக வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரின் கொலைக்கான பின்னணி குறித்து ஆராயும்போது, மருத்துவமனை நிர்வாகத்தினர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும், பட்டம் பெற மருத்துவ மாணவர்களிடம் பணம் பெற்றதும் தெரியவந்தது.

இதனை பயிற்சி பெண் மருத்துவர் தட்டிக்கேட்டதால், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும் ஆடியோக்கள் வெளியாகியிருந்தன.

நிதி முறைகேடு விவகாரத்தில் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.