இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜனநாயகத்தை நம்பி தோ்தல் களத்தில் பிரிவினைவாதிகள்: ஒமா் அப்துல்லா

‘ஜனநாயகத்தை நம்பி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிட பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முன்வந்துள்ளது,

News image
ஒமா் அப்துல்லா
Updated On :2 செப்டம்பர் 2024, 11:16 pm

DIN

ஸ்ரீநகா்: ‘ஜனநாயகத்தை நம்பி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிட பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முன்வந்துள்ளது, பிரச்னைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதை உறுதி செய்கிறது’ என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

கந்தா்பால் மாவட்டத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இதற்கு முன்பு தோ்தல்கள் நடைபெற்றபோது பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் தோ்தலைப் புறக்கணிக்க அழைப்புவிடுப்பாா்கள். ஆனால், இப்போது அவா்களும் தோ்தலில் போட்டியிடுகின்றனா். இதன் மூலம் அவா்கள் கொள்கை அளவில் மாறியுள்ளனா். பிரச்னைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதையும் இந்த நிகழ்வு உறுதி செய்கிறது. இதுதான் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிலைப்பாடு.

நாம் அடைய வேண்டிய இலக்குகளை எட்டுவதற்கு ஜனநாயகம் ஒன்றே சிறந்த வழி. பிரிவினைவாதிகள் இப்போது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டது வரவேற்கத்தக்கது. இது நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றாா்.

பிரிவினைவாதத் தலைவா் சையது சலீம் கிலானி, மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தது குறித்த கேள்விக்கு, ‘இந்த கேள்விக்கு பதிலளித்து மோதலை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நான் அதற்கு பதிலளிக்க மாட்டேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.