விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள இனிப்பகத்தில் 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக கொண்டாபடும் நிகழ்வு என்றால் அது விநாயகர் சதுர்த்தி விழா தான். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பக்தர்கள் தங்கள் வீடுகளுக்குள் விநாயகர் சிலைகளை கொண்டு வருதல், விரதம் அனுசரித்தல், பாரம்பரிய பிரசாதம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொல்கத்தாவின் பவானிபூர் பகுதியில் உள்ள இனிப்பகம் ஒன்றில் பிரம்மாண்ட லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு லட்டுவின் எடை மட்டும் 500 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் பிரியங்கா மாலிக் கூறுகையில், "எங்கள் பண்டிகை காலம் விநாயகர் சதுர்த்தியுடன் தொடங்குகிறது. இது எங்களுக்கு மிகவும் புனிதமான நாள். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது சிறப்பு செய்ய முயற்சி செய்கிறோம். எங்கள் கடை கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் பழமையானது.
இந்த ஆண்டு, நாங்கள் விநாயகப் பெருமானுக்கு பிரசாதமாக 500 கிலோ லட்டு தயார் செய்துள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

ஹார்திக் பாண்டியா வருகை: கொல்கத்தா பந்துவீச்சு; மும்பை பேட்டிங்!

ஸ்ரீ செங்காளம்மன் கோயில் ஜல வாசம் திருவிழா நிறைவு
கொல்கத்தாவில் மமதா இறுதிக்கட்ட பிரசாரம்! நடந்து சென்று வாக்கு சேகரிப்பு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



