விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆன்லைன் நண்பரால் 20 நாள்களாக அடைத்து வைக்கப்பட்ட பெண்!

பெண்ணை மீட்ட காவல்துறையினர் கடத்தியவரையும் கைது செய்தனர்

News image
Updated On :8 செப்டம்பர் 2024, 4:11 pm

DIN

ஆன்லைன் நண்பரால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறையினர், கடத்தியவரையும் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் 18 வயது பெண் ஒருவர், சமூக ஊடகம் மூலம் பழக்கமான 19 வயதுடைய இளைஞரின் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்கச் சென்றுள்ளார். ஆனால் சந்திப்பின்போது, சிறுமியை அந்த இளைஞர், ஒரு ஹோட்டல் அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

இதனையடுத்து, தங்களது மகள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், தன்னை ஒருவர் அடைத்து வைத்திருப்பதாகவும், தான் இருக்குமிடம் குறித்தும் தனது பெற்றோருக்கு மொபைல் போனில் குறுஞ்செய்தி மூலம், சுமார் 20 நாள்களுக்கு பிறகு தகவல் அளித்துள்ளார், அந்தப் பெண். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பெண்ணை மீட்டதுடன், அடைத்து வைத்திருந்த இளைஞரை கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவும் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.