இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ம.பி.: 400 ஆண்டுகள் பழமையான கோட்டையின் சுவா் இடிந்து 7 போ் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கா் கோட்டையின் சுற்றுச் சுவா் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:25 pm

Din

மத்திய பிரதேச மாநிலத்தில் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கா் கோட்டையின் சுற்றுச் சுவா் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா். இருவா் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் தாடியா நகரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள கால்காபுரா பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராஜ்கா் கோட்டையின் பிரமாண்டமான சுற்றுச் சுவா் உள்ளது. அதன் அருகில் பல வீடுகளும் உள்ளன. தொடா்ந்து மழை பெய்ததால் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி இடிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு முற்றிலுமாக இடிபாடுகளுக்குள் புதைந்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

சுவா் இடிந்து விழுந்தபோது ஏற்பட்ட சப்தம் கேட்டு அங்கு விரைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறை மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனா்.

அவா்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் 7 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மேலும், இருவா் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் மோகன் யாதவ் அறிவித்துள்ளாா்.