சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

'தலையிட வேண்டும்' - குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கொல்கத்தா மருத்துவர்கள் கடிதம்!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

News image
கோப்புப்படம்- PTI
Updated On :13 செப்டம்பர் 2024, 11:57 am

DIN

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவர்களின் போராட்டம் அங்கு தொடர்கிறது.

இந்நிலையில் செப். 11 அன்று மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மாநில அரசு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் மருத்துவர்கள், 'முதல்வர் மமதா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும், பேச்சுவார்த்தையில் 30 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவுக்கு அனுமதி வேண்டும், பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதையடுத்து, பயிற்சி மருத்துவர்களை மீண்டும் நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மாநில அரசு. ஆனால், பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதனால் நேற்றும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதையடுத்து பயிற்சி பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

'இந்த கடினமான காலங்களில் உங்கள் தலையீடு, நம்மைச் சுற்றியுள்ள இருளில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் காட்டும், நாங்கள் அச்சமின்றி பணி செய்ய உதவும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.