மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'பெண் மருத்துவர்கள் ஏன் இரவில் பணிபுரியக் கூடாது?' - உச்ச நீதிமன்றம் கேள்வி!

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது, பாதுகாப்பு வழங்குவது உங்கள் கடமை என்று மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :17 செப்டம்பர் 2024, 12:13 pm

DIN

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது, பாதுகாப்பு வழங்குவது உங்கள் கடமை என்று மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. கொல்லப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனிடையே, பாதுகாப்பு கருதி பெண் மருத்துவர்கள் இரவுப் பணியைத் தவிர்க்குமாறு மேற்கு வங்க அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு,

பெண்கள் இரவில் பணியாற்ற முடியாது என்று எப்படி நீங்கள் சொல்லலாம். பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, அவர்கள் சம வாய்ப்புகளையே கோருகின்றனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே விரும்புகின்றனர்.

இரவுப் பணியில் உள்ள பெண் மருத்துவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை. அதைவிடுத்து அவர்கள் இரவுப் பணிக்கு வரக்கூடாது என்று நீங்கள் சொல்ல முடியாது.

பெண் மருத்துவர்கள் இரவுப் பணியை தவிர்க்குமாறு கூறிய மேற்கு வங்க அரசின் உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.