
கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததே தனது அரசின் மிகப்பெரிய சாதனை என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கீழ் 1.3 லட்சம் வீடுகளைக் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர்,
ஏழைகளுக்கு சொந்த வீடு இருப்பது அவரது எதிர்க்காலத்திற்கு உத்தரவாதம் என்று அவர் கூறினார். தனது அரசின் திட்டங்களால் தலித், ஓபிசி மற்றும் பழங்குடியினர் அதிகப் பயனடைந்துள்ளனர்.
ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோர் வளர்ந்த இந்தியாவின் தூண்கள் என்று மோடி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.