திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தேசப் பாதுகாப்பினைக் கூட தேர்தல் நோக்கிலேயே பாஜக அணுகுகிறது: ஜெய்ராம் ரமேஷ்

நாட்டின் பாதுகாப்பினைக் கூட பாஜக தேர்தல் கண்ணோட்டத்திலேயே அணுகுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

News image

ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

Updated On :13 ஜனவரி 2024, 4:06 pm IST

நாட்டின் பாதுகாப்பினைக் கூட பாஜக தேர்தல் கண்ணோட்டத்திலேயே அணுகுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

சனிக்கிழமை எக்ஸ் சமூக வலைதளத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சமீபத்தில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அதில் அவர் கடந்த 6 மாதங்களாக ரஜௌரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் நிலவி வரும் பயங்கரவாதச் செயல்கள் கவலையளிப்பதாக தெரிவித்திருந்தார்.

ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் கருத்துகள் தேசப் பாதுகாப்பு குறித்து சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட நினைவூட்டல் ஆகும். ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட 2019 ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு பிறகு இன்று வரை 160-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

பணமதிப்பிழப்பு, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நீக்கியது போன்ற நடவடிக்கைகளால் பயங்கரவாதம் தடுக்கப்பட்டதாக பாஜக கூறிவருவது முற்றிலும் பொய் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. 

இந்தியாவின் தேச நலன்களைப் பாதுகாப்பதற்கு கடற்கரைகளுக்கு செல்வதும், சமூக ஊடகப் பிரச்சாரங்களும் மட்டுமே போதுமானது என்று பிரதமர் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தேசப் பாதுகாப்பினைக் கூட பாஜக தேர்தல் நோக்கிலேயே அணுகுகிறது. அக்னிபாத் திட்டம் குறித்த அறிவிப்பு ராணுவ அதிகாரிகளுக்கே அதிர்ச்சியளித்ததாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.