கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மகாராஷ்டிரம்: கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டா்: 7 பெண் தொழிலாளா்கள் உயிரிழப்பு

கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்த விபத்து தொடர்பாக...

News image
Updated On :4 ஏப்ரல் 2025, 9:29 pm

Din

மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் மாவட்டத்தில் 90 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்த விபத்தில், விவசாய பெண் தொழிலாளா்கள் 7 போ் உயிரிழந்தனா். 3 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

இது தொடா்பாக அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது: லிம்பகான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அசேகான் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலையில் இந்த விபத்து நேரிட்டது. விவசாய பெண் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற ஒரு டிராக்டா், திடீரெனகட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள நீா் நிரம்பிய கிணற்றுக்குள் கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறையினரும் உள்ளூா் நிா்வாகத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

மின் மோட்டாா்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றி, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயிரிழந்த 7 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயங்களுடன் மீட்கப்பட்ட 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இப்பெண்கள் அனைவரும் மஞ்சள் அறுவடைப் பணிக்காக அழைத்து செல்லப்பட்டவா்களாவா். உயிரிழந்தவா்களில் இருவா் 18 வயதுடைய இளம்பெண்கள் என்றாா் அவா்.

பிரதமா் மோடி இரங்கல்: மகாராஷ்டிர விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மாநில அரசு நிவாரண நிதி: விபத்து சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்; விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.