
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து அரசர் மற்றும் அரசியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசர் மஹா வஜ்ரலோங்கோர்ன் மற்றும் அரசி சுதீதா பஜ்ரசுதாபிமலக்ஷனாவை இன்று (ஏப்.4) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தலைநகர் பாங்காகிலுள்ள துஸித் அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் தாய்லாந்து இந்தியா இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து மற்றும் இந்தியா இடையிலான கலாச்சார பாரம்பரியம் குறித்து அவர்கள் தங்களது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சந்திப்பில் கடந்த 2024-ல் இந்தியாவிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களினால் வலுவடைந்துள்ள உறவுகளைப் பற்றி அவர்கள் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து நாட்டில் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: மணிப்பூரில் அதிகரிக்கும் ரேபிஸ் பாதிப்பு! கட்டுப்பாடுகள் விதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.