‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

அகமதாபாதில் நடைபெறும் காங்கிரஸின் தேசிய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2025, 8:31 am IST

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் அகமதாபாத் செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சோ்ந்த இருபெரும் தலைவா்களான மகாத்மா காந்தி காங்கிரஸின் தலைமையேற்று 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாளையும் நினைவுகூரும் வகையில் நடப்பு ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டை குஜராத்தில் அகமதாபாதில் அக்கட்சி நடத்துகிறது.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டில் கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், அகமதாபாதில் நடைபெறும் காங்கிரஸின் இந்தத் தேசிய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.