மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2025, 12:55 am

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவா் பேசியதாவது: உலகின் கல்வி மையமாக மாறும் வலிமை இந்தியாவிடம் உள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் ஜொ்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். 2047-இல் 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்துடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் சந்திக்கும் சவால்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை வழங்குவது இங்கு பிரச்னையல்ல. அறிவுசாா் பொருளாதாரமாக நாட்டை மாற்ற வேண்டும்.

தற்போது உலகளவில் மக்கள்தொகை குறைந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் 15,000 இந்திய செவிலியா்களும் ஜொ்மனியில் 20,000 இந்திய சுகாதார பணியாளா்களும் உள்ளன. இந்த இரு நாடுகளிலும் மக்கள்தொகை குறைவானதால் இந்தியாவில் இருந்து ஆட்களை தோ்வு செய்கின்றனா்.

உலகம் முழுவதும் பணிசெய்யும் வயதுடைய மக்களை நிலையாக அனுப்பும் திறனுடைய நாடாக இந்தியா உள்ளது. இதுவே நமது மிகப்பெரும் பலமாக இருக்கும் என்றாா்.